Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டி தொடரை சமப்படுத்தியுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் பர்கான் பெகாத்ரீன் 70 ஓட்டங்களையும், ரீலி ரொசோ 39 ஓட்டங்களையும், ஏபி டீவில்லியர்ஸ் 31 ஓட்டங்களையும், வேணன் பிளந்தர் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட டவ் பிரேஸ்வெல் 3 விக்கெட்டுக்களையும், அடம் மில்லின் 2 விக்கெட்டுக்களையும், இஷ் சோதி, கிரான்ட் எலியட் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 44.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் மார்ட்டின் குப்தில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும், டொம் லதாம் 64 ஓட்டங்களையும் பெற்றார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஆரோன் பன்கிஸோ, இம்ரான் டாகிர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக மார்ட்டின் குப்தில் தெரிவானார். இரு அணிகளுக்கிடையேயான தீர்மானமிக்க மூன்றாவது போட்டி நாளை மறுதினம் டேர்பனில் இடம்பெறவுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago