Shanmugan Murugavel / 2022 நவம்பர் 01 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பிறிஸ்பேணில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான குழு ஒன்று சுப்பர் – 12 போட்டியில் இலங்கை வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் மொஹமட் நபி, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்ட இடைவெளிகளில் லஹிரு குமார (2), வனிடு ஹஸரங்க (3), தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜிதவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 145 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, தனஞ்சய டி சில்வாவின் ஆட்டமிழக்காத 66 (42) ஓட்டங்களோடு 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், முஜீப் உர் ரஹ்மான், ரஷீட் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக வனிடு ஹஸரங்க தெரிவானார்.
27 minute ago
33 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
49 minute ago
1 hours ago