Editorial / 2018 மார்ச் 07 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், புலவாயவோவில் நேற்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இரண்டு ஓட்டங்களால் சிம்பாப்வே வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரண்டன் டெய்லர் 89 (88), சிகண்டர் ராசா 60 (68) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், முஜூப் உர் ரஹ்மான், ரஷீட் கான் ஆகியோர் தலா 3, டவால்ட் ஸட்ரான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ரஹ்மத் ஷா 69 (91), மொஹமட் நபி 51 (56) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பிளஸிங் முஸர்பனி 4, சிகண்டர் ராசா 3, பிரயான் விற்றோரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றைய போட்டிகளில், ஐக்கிய அரபு அமீரகத்தை மேற்கிந்தியத் தீவுகளும் பப்புவா நியூ கினியை அயர்லாந்தும் ஹொங் கொங்கை ஸ்கொட்லாந்தும் வென்றிருந்தன.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago