Shanmugan Murugavel / 2021 ஜூன் 07 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒப்பந்தமில்லாமல் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் இணங்கியுள்ளனர்.
வீரர்களின் மதிப்பீடுகளை வெளிப்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை ஒத்துக் கொண்ட நிலையிலேயே வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இணங்கியுள்ளனர்.
குறித்த மதிப்பீடுகள் மூலமே இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய முன்மொழியப்பட்ட ஒப்பந்தத் திட்டம் அமைந்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலுருந்து திரும்பியதும் ஒவ்வொரு வீரர்களினதும் மதிப்பீட்டுப் புள்ளிகளை அளிப்பதாக உத்தியோகபூர்வமாக கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
எவ்வாறெனினும், திறமை வெளிப்பாடுகள், உடற்றகுதியை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தங்களுக்காக மதிப்பிடப்பட வேண்டும் என வீரர்கள் கோரியிருந்தமையிலிருந்து இலங்கை கிரிக்கெட் சபையின் தொழில்நுட்ப செயற்குழு அசையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், 50 சதவீதம் திறமை வெளிப்பாடும், 20 சதவீதம் உடற்றகுதியும், 10 சதவீதம் தலைமைத்துவமும், 10 சதவீதம் தொழில்முறைத் திறனும், 10 சதவீதம் எதிர்காலமும் கருத்திற் கொள்ளப்பட்டிருந்தது.
28 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
6 hours ago
6 hours ago