2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா எதிர் இங்கிலாந்து: இ-20 ச.போ. தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அஹமதபாத்தில் நாளை இரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இவ்வாண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் பிற்பகுதியில் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சிறந்த தயார்படுத்தலாக இத்தொடர் இரண்டு அணிகளுக்கும் காணப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்தில் இங்கிலாந்தும், இரண்டாமிடத்தில் இந்தியாவும் காணப்படுகின்ற நிலையில், தொடரை 4-1 என அல்லது 5-0 என இந்தியா வென்றால் முதலாமிடத்துக்கு இந்தியா முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கமாக, 1-4 அல்லது 0-5 என தொடரை இழந்தால் மூன்றாமிடத்துக்கு இந்தியா கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .