2025 மே 01, வியாழக்கிழமை

இந்தியாவுக்கு 252 ஓட்டங்கள் இலக்கு

Editorial   / 2025 மார்ச் 09 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 252 ஓட்டங்கள் தேவை. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 251 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி துடுப்பாட்டம் செய்ய முடிவு செய்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 15-வது முறை இந்தியா நாணய சுழற்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது. அணித்தலைவர் ரோஹித் தொடர்ந்து 12-வது முறையாக நாணய சுழற்சியை இழந்துள்ளார். இருப்பினும் ‘எதற்கும் தயார்’ என நாணய சுழற்சியின் போது அவர் சொல்லி இருந்தார். இந்த தொடர் அந்த அனுபவத்தை தங்களுக்கு தந்துள்ளதாக கூறினார்.

நியூஸிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இந்தப் போட்டியில் கான்வே விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் தலைவர் சான்டனர் அவரை ஆடும் லெவனில் எடுக்கவில்லை.

 

முதல் 5 ஓவர்களில் 37ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து. இன்னிங்ஸின் முதல் மூன்று ஓவர்களில் வெறும் 10 ஓட்டங்களை தான் எடுத்திருந்தது நியூஸி. அதற்கடுத்த இரண்டு ஓவர்களில் வேக வேகமாக ஓட்டங்களை குவித்தார் ரச்சின். உடனடியாக வருண் சக்கரவர்த்தியை பந்து வீச செய்தார் அணித்தலைவர் ரோஹித். அதற்கான பலனாக 8-வது ஓவரில் வில் யங் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் வருண். அந்த விக்கெட் இந்திய அணிக்கு அவசியமானதாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு ரச்சின் கொடுத்த 2 பிடிக்​யெடுக்கும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது.

11-வது ஓவரை குல்தீப் வீசினார். முதல் பந்தில் ரச்சின் ரவீந்திராவை போல்ட் செய்தார். அதற்கடுத்து அவர் வீசிய 13-வது ஓவரில் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்ச்சை அவரே பிடித்து வெளியேற்றினார். அதன் பின்னர் நியூஸிலாந்து அணியின் மிட்செல் மற்றும் டாம் லேதம் இணைந்து மிகவும் நிதானமாக இன்னிங்ஸை அணுகினர். பவுண்டரி அடிக்க முடியாத காரணத்தால் அவர்கள் மீது அழுத்தம் கூடியது. அதோடு ஸ்பின் ஆப்ஷனை வைத்து மேலும் நெருக்கடி கொடுத்தார் ரோஹித்.

24-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் லேதமை ஜடேஜா வெளியேற்றினார். அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் கிளென் பிலிப்ஸ் 52 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வருண் பந்துவீச்சில் போல்ட் ஆனார். 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. அந்த அணிக்கு களத்தில் நம்பிக்கை தந்த இருவரில் மிட்செல் ஒருவராக திகழ்ந்தார். அரை சதம் பதிவு செய்ய 91 பந்துகள் எடுத்துக் கொண்டார். அவர் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷமி வேகத்தில் விக்கெட்டை இழந்தார். சான்ட்னரை கோலி ரன் அவுட் செய்தார்.

50 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்க​ளை எடுத்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும் போதெல்லாம் அதை நியூஸிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 40 பந்துகளில் 53 ஓட்டங்களை அவர் எடுத்தார். 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.

இந்திய அணியின் பவுலர்கள் தரப்பில் வருண் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் ஷமி தலா 1 விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும் 9 ஓவர்களில் 74 ஓட்டங்க​ளை கொடுத்திருந்தார் ஷமி. ஓவருக்கு 3 ஓட்டங்கள் என்ற எகானமயில் 10 ஓவர்களை பூர்த்தி செய்தார் ஜடேஜா. வருண், குல்தீப் மற்றும் அக்சர் ஆகியோரின் பவுலிங் எகானமியும் சிறப்பாக இருந்தது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 252 ஓட்ங்களை எடுக்க வேண்டும். நியூஸிலாந்து அணியில் மேட் ஹென்றி இன்று (09) விளையாடவில்லை. இந்திய அணி இந்த போட்டியில் 4 கேட்ச்களை டிராப் செய்தது. அதை பிடித்திருந்தால் நியூஸிலாந்து அணியை இன்னும் குறைந்த ஓட்டங்களில் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .