Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 28 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI), 329 ஓட்டங்களை இந்தியா பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், புனேயில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் பதிலணித்தலைவர் ஜொஸ் பட்லர், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஷீகர் தவான், ரோஹித் ஷர்மா மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. எனினும், சத இணைப்பாட்டத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவேளைகளில் ரோஹித், தவான், அணித்தலைவர் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அடில் ரஷீட், மொயின் அலி, லியம் லிங்ஸ்டோனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இந்நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த றிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியில் தமது இனிங்ஸை விரைவாக நகர்த்திய இந்தியா, குறிப்பிட்ட இடைவேளைகளில் அவர்கள் இருவரையும் சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸிடம் பறிகொடுத்தது.
பின்னர் வந்த ஷர்துல் தாக்கூர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியபோதும், அவர், குருனால் பாண்டியா, பிரசீத் கிருஷ்ணா, புவ்னேஷ்வர் குமாரின் விக்கெட்டுகளை மார்க் வூட், றீஸ் டொப்லி ஆகியோர் கைப்பற்றிய நிலையில், 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்களையே இந்தியா பெற்றது.
துடுப்பாட்டத்தில், றிஷப் பண்ட் 78 (62), ஷீகர் தவான் 67 (56), ஹர்டிக் பாண்டியா 64 (44), ரோஹித் ஷர்மா 37 (37), ஷர்துல் தாக்கூர் 30 (21), க்ருனால் பாண்டியா 25 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மார்க் வூட் 3, அடில் ரஷீட் 2, மொயின் அலி, லியம் லிவிங்ஸ்டோன், றீஸ் டொப்லி, சாம் கர்ரன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago