Shanmugan Murugavel / 2022 மார்ச் 09 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தரான ஆர். பென்சி என்பவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று தொடக்கம் 22ஆம் திகதி வரையில் கபடிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. 17ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆடவர் கபடிப் போட்டியில் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.
விமான பயணச்சீட்டு, உணவு, தங்குமிடம் மற்றும் உள்ளகப் போக்குவரத்து உள்ளடங்கலாக உரிய வசதிகளை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.
சர்வதேச கபடி சம்மேளனம் மற்றும் ஆசிய கபடி சம்மேளனத்தின் அனுசரணையில் “தி பங்களாதேஷ் கபடி கூட்டமைப்பு பங்கபந்து கோப்பை - 2022” சர்வதேச கபடி போட்டியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago