2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை- சிம்பாபேக்கு இடையில் இன்று 2ஆவது போட்டி

Editorial   / 2022 ஜனவரி 18 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா சிம்பாபே அணிக்கும் இலங்கை அணிக்கும் கண்டி- பல்லேகலையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாபே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 296 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சேஹ்ன் வில்லியம்ஸன் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

87 பந்துகளுக்கு முகம்கொடுத்து 100 ஓட்டங்களைப் பெற்ற அவர், 2 ஆறு ஓட்டங்களையும் 9 நான்கு ஓட்டங்களையும் பெற்று சதம் அடித்தார்.

297 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்தப் ​போட்டியில் இலங்கை அணி சார்பாக சந்திமால் மற்றும் நிசங்க ஆகியோர் இணைப்பாட்டமாக 75 ஓட்டங்களையும் சரித் அசலங்க 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கமைய புதிய வருடத்தில் முதலாவது ​போட்டியை இலங்கை அணி வெற்றிக்கொண்டதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, பல்லேகல மைதானத்தில் இன்று (18) நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .