Editorial / 2017 ஜூலை 18 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய், காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, மற்றோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷீகர் தவான் இணைக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமே, முரளி விஜய்க்கு, அவரது மணிக்கட்டில் உபாதை காணப்பட்டது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் வைத்து நடந்த தொடரிலும், அவருக்கு இவ்வுபாதை காணப்பட்டது.
இந்நிலையில், இலங்கைத் தொடருக்கு முன்னதான பயிற்சிப் போட்டியில், அவருக்கு அவ்வுபாதை மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
13 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
3 hours ago