Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 11 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற இங்கிலாந்து உடனான காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற நடப்புச் சம்பியன்களான பிரான்ஸ், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
பிரான்ஸ் சார்பாக, ஒரெலியான் டுவமெனி, ஒலிவியர் ஜிரூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை அணித்தலைவர் ஹரி கேன் பெற்றிருந்தார். ஒரு பெனால்டி மூலம் இக்கோலைப் பெற்ற கேன், இன்னொரு பெனால்டியை கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற மொரோக்கோவுடனான காலிறுதிப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து போர்த்துக்கல் வெளியேறியது. மொரோக்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை யூசுஃப் என்-நெஸ்ரி பெற்றிருந்தார்.
26 minute ago
36 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
56 minute ago