Shanmugan Murugavel / 2021 ஜனவரி 27 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான, விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இன்டர் மிலன் தகுதி பெற்றுள்ளது.
சான் சிரோவில் இன்று அதிகாலை நடைபெற்ற ஏ.சி மிலனுடனான காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே அரையிறுதிப் போட்டிக்கு இன்டர் மிலன் தகுதிபெற்றுள்ளது.
இன்டர் மிலன் சார்பாக, றொமெலு லுக்காக்கு, கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸல்டான் இப்ராஹிமோவிச் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் லுக்காக்குவும், இப்ராஹிமோவிச்சும் மோதுண்டிருந்ததுடன், அப்போது மஞ்சள் அட்டை காட்டப் பெற்ற இப்ராஹிமோவிச், பின்னர் இன்டர் மிலனின் அலெக்ஸான்டர் கொலரோவ்வை வீழ்த்திய நிலையில் சிவப்பு அட்டை காட்டப் பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
12 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago