Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, உலகின் ஆறாம் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் தகுதிபெற்றுள்ளார்.
13 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோக்கோவிச், இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற அவுஸ்திரேலியாவின் ஜோன் மில்மானுடனான காலிறுதிப் போட்டியில் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற பிறிதொரு காலிறுதிப் போட்டியில், உலகின் ஏழாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சை 2-6, 6-4, 7-6 (7-5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற ஜப்பானின் கீ நிஷிகோரி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், இன்று இடம்பெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெய்னின் கார்லஸ் சுவாரஸ் நவரோவாவை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸ் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற பிறிதொரு காலிறுதிப் போட்டியில், உக்ரேனின் லெசியா சுரென்கோவை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்ற ஜப்பானின் நயோமி ஒஸாகா அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
அந்தவகையில், நாளை மறுதினம் அதிகாலையில் இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டிகளில், நடப்புச் சம்பியனும் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போத்ரோவை எதிர்கொள்ளவுள்ளதுடன், ஜோக்கோவிச், நிஷிகோரியை எதிர்கொள்ளவுள்ளார்.
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago