2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல் உரிமைகளுக்காக போட்டிபோடும் பேஸ்புக், டுவிட்டர்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளுக்கான ஊடக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, தொலைக்காட்சி நிறுவனங்களல்லாத பேஸ்புக், டுவிட்டர், அமெஸொன், றிலையன்ஸ் ஜியோ போன்றவையும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

2018ஆம் ஆண்டு முதல், ஐ.பி.எல் போட்டிகளுக்கான தொலைக்காட்சி உரிமைகள், இந்திய உபகண்டத்தில் 2027ஆம் ஆண்டு வரையும் டிஜிட்டல் உரிமைகள் 2022ஆம் ஆண்டு வரையும் ஏனைய உரிமைகள், உலகளாவிய ரீதியில் 2022ஆம் ஆண்டு வரையும் அமையும்.

இந்நிலையிலேயே, தங்களுடைய கேள்விப் பத்திரங்களைக் கையளிப்பதற்காக, பேஸ்புக், டுவிட்டர் போன்ற மேற்படி நிறுவனங்கள், விண்ணப்பங்களை வாங்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .