2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கெய்ன்ஸ் குற்றமற்றவர் என கண்டுபிடிப்பு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 30 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் இடம்பெற்ற சௌத்வோர்க் கிரவுண் நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது வாரமாக இடம்பெற்ற விசாரணையின் முடிவில், பொய் வாக்குமூலம் வழங்கிய, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர் என நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையோர் இணங்கியுள்ளனர்.

பத்து மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் ஆழமாக ஆராய்ந்து நேற்றுக் காலை 10.40 அளவில் இணக்கத்துக்கு வந்த நீதிபதிகள், தீர்ப்பை அளித்திருந்தனர். மேற்படி இந்த முடிவானது, கெய்ன்‌ஸுக்கு பாரிய நிம்மதியை அளித்துள்ளது. தீர்ப்புகளின் படி, எந்தவொரு ஆட்டநிர்ணய பங்கேற்புகளில் இருந்தும் கெய்ன்‌ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்போது பிரண்டன் மக்குலம், ரிக்கி பொன்டிங், டேனியல் வெட்டோரி ஆகியோர் சாட்சியங்களை வழங்கியிருந்தபோதும், நீதிபதிகள் குழுவால் ஒருமித்த முடிவுக்கு வரமுடியவில்லை. எனினும், நேற்றைய நாளின் போது அரை மணித்தியாலத்தில் நீதிபதிகள் முடிவுக்கு வந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .