Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், டொரினோவின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்கள் ஜுவென்டஸுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஜுவென்டஸ் சார்பாக, பெடெரிக்கோ சியெஸ்கா, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டொரினோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அன்டோனியோ சனப்ரியா பெற்றிருந்தார்.
இதேவேளை, ஏ.சி மிலனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், சம்ப்டோரியாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஜென்ஸ் பீற்றர் ஹேக் பெற்றதோடு, சம்ப்டோரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை பேபியோ குவைரலா பெற்றிருந்தார்.
இந்நிலையில், சஸுலொவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், றோமாவுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. றோமா சார்பாக, லொரென்ஸோ பெல்லகிரினி, புரூனோ பெரெஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சஸுலோ, ஹமெட் ஜுனியர் ட்ராரே, ஜியகொமோ றஸ்படோரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026