2025 மே 19, திங்கட்கிழமை

சம்பியனான கல்முனை சாஹிரா

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 19 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலய மட்ட மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான எட்டு அஞ்சலோட்ட போட்டிகளில் ஐந்து முதலிடங்களையும், 2 இரண்டாமிடங்களையும் பெற்று அஞ்சலோட்ட போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன், ஆண்களுக்கான போட்டிகளில் 131 புள்ளிகளைப் பெற்று கல்முனை சாஹிரா சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போட்டியில் சாஹிராவிலிருந்து 28 தங்கப் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள், 7 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X