Shanmugan Murugavel / 2021 நவம்பர் 04 , பி.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றதுடன், அத்லாண்டா சார்பாக, ஜோசிப் இலிசிச், டுவான் ஸப்பட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஜி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லி வென்றது. லில்லி சார்பாக, ஜொனதன் டேவிட், நனிடமோ இகோனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, செவில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகாஸ் ஒகம்பொஸ் பெற்றிருந்தார்.
39 minute ago
2 hours ago
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
25 Jan 2026