2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜுவென்டஸ், இன்டர், ஏ.சி வென்றன

Editorial   / 2018 செப்டெம்பர் 02 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில் இடம்பெற்ற போட்டிகளில், ஜுவென்டஸ், இன்டர் மிலன், ஏ.சி மிலன் ஆகியவை வென்றன.

பர்மா அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாக, மரியோ மண்டூஸிக், பிளெய்ஸி மத்தியூடி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பர்மா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெர்வின்ஹோ பெற்றார்.

இதேவேளை, பொலொக்னா அணியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. இன்டர் மிலன் சார்பாக, றட்ஜா நைன்கொலன், அன்டோனியோ கன்ட்ரேவா, இவான் பெரிசிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் றோமாவை ஏ.சி மிலன் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .