2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஜோக்கோவிச்சை வென்று சம்பியனான நடால்

Shanmugan Murugavel   / 2021 மே 17 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் தலைநகர் றோமில் நடைபெற்றுவந்த இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ரஃபேல் நடால் சம்பியனானார்.

நேற்றிரவு நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை எதிர்கொண்ட ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.

இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில், உலகின் தற்போதைய 10ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட, உலகின் தற்போதைய ஒன்பதாம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .