Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸுக்குமிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
லிவர்பூல் சார்பாக, மொஹமட் சாலா, றொபேர்ட்டோ பெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை சண் ஹெயுங்-மின் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஆர்சனலின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், செளதாம்டனுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியர்-எம்ரிக் உபமெயாங்க் பெற்றதோடு, செளதாம்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை தியோ வொல்கொட் பெற்றிருந்தார்.
இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றிருந்தது. எவெர்ற்றன் சார்பாக, றிச்சர்ல்ஸன், மேஸன் ஹொல்கேட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இப்போட்டிகளின் முடிவில் 28 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. 25 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் டொட்டென்ஹாம் காணப்படுகின்றது. செளதாம்டனும், லெய்செஸ்டரும் தலா 24 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் மூன்றாம், நான்காம் இடங்களில் முறையே காணப்படுகின்றன.
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025