Gopikrishna Kanagalingam / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே, அவரது பந்துவீச்சுத் தொடர்பான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்திடம் கையளிக்கப்பட்ட போட்டி மத்தியஸ்தரின் அறிக்கையிலேயே, கௌஷாலின் பந்துவீச்சுத் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை சார்பாக இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள தரிந்து கெஷால், 2 ஐந்து-விக்கெட் பெறுதிகள், 1 நான்கு-விக்கெட் பெறுதி ஆகியவற்றுடன் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தவிர, ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்றிலும் அவர் பங்குபற்றியுள்ளார்.
அவரது பந்துவீச்சுச் சோதனை இடம்பெற்று, அதன் முடிவுகள் வெளிவரும்வரை, சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்கு அவருக்கு அனுமதியுண்டு. எனினும், இலங்கை அணி 6 வாரங்களுக்குச் சர்வதேசப் போட்டிகளெவற்றிலும் பங்குபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சார்பாக சர்வதேசப் போட்டிகளில் இறுதியாக சச்சித்திர சேனநாயக்கவே பந்தை வீசியெறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தடை விதிக்கப்பட்டதோடு, அவரது பந்துவீச்சு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago