2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 29 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, பார்ளில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்து ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, அணித்தலைவர் குயின்டன் டி கொக்கின் 30 (18) ஓட்டங்களின் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றாலும், கட்டுக்கோப்பாக பந்துவீசிய ஜொஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீட்டிடம் முறையே 1, 1, 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஓட்டங்களைப் பெறத் தடுமாறியது. பின்னர் ஜோர்ஜ் லின்டியின் 29 (20) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, லுங்கி என்கிடி மற்றும் கட்டுக்கோப்பாக பந்துவீசிய தப்ரையாஸ் ஷம்சியிடம் முறையே 1, 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தபோதும், டேவிட் மலனின் 55 (40), அணித்தலைவர் ஒய்ன் மோர்கனின் ஆட்டமிழக்காத 26 (17) ஓட்டங்களுடன் 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக டேவிட் மலன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X