Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 02 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், செஞ்சூரியனில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, குயின்டன் டி கொக், ஏய்டன் மர்க்ரம், அணித்தலைவர் தெம்பா பவுமா, ஹென்றிச் கிளாசெனை ஆரம்பத்திலேயே ஷகீன் ஷா அஃப்ரிடி (2), மொஹமட் ஹஸ்னைன், பாஹீம் அஷ்ரப்பிடம் இழந்து தடுமாறியது.
எனினும், அடுத்து வந்த றஸி வான் டர் டுஸரின் ஆட்டமிழக்காத 123 (134), டேவிட் மில்லரின் 50 (56), அன்டிலி பெக்லுவாயோவின் 29 (35) ஓட்டங்களின் துணையோடு, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 274 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே பக்கர் ஸமனை ககிஸோ றபாடாவிடம் இழந்தது. எனினும், இமாம்-உல்-ஹக்கின் 70 (80), அணித்தலைவர் பாபர் அஸாமின் 103 (104) ஓட்டங்களோடு வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது.
எவ்வாறாயினும், அஸாம், இமாம்-உல்-ஹக், அறிமுக வீரர் டனிஷ் அஸிஸ், ஆசிஃப் அலியை அன்றிச் நொர்ட்ஜேயிடம் இழந்தபோதும், மொஹமட் றிஸ்வானின் 40 (52), ஷடாப் கானின் 33 (30) ஓட்டங்களோடு, இவர்களிருவரையும் பெக்லுவாயோவிடம் இழந்தபோதும், பாஹீம் அஷ்ரஃப்பின் உதவியுடன், 50 ஓவர்களில் 7 விக்கெடுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக அஸாம் தெரிவானார்.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026