Shanmugan Murugavel / 2021 மார்ச் 02 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியானது, வெலிங்டனில் இலங்கை நேரப்படி நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
முதலிரண்டு போட்டிகளையும் அவுஸ்திரேலியா தோற்ற நிலையில், தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா உள்ளது.
அந்தவகையில், அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், கிளென் மக்ஸ்வெல் உள்ளிட்டோரிடமிருந்து மேம்பட்ட பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுவதுடன், பந்துவீச்சாளர்களும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
அன்றூ டை, ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் ஆகியோர் இப்போட்டியில் அவுஸ்திரேலியாவில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக, நியூசிலாந்து சார்பாக அதேயணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026