Shanmugan Murugavel / 2025 நவம்பர் 10 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது.
பொலொக்னா சார்பாக திஜ்ஸ் டல்லிங்கா, ஜோன் லுகுமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. இன்டர் சார்பாக லொட்டரோ மார்டினெஸ், அஞ்சே-யோன் பொன்னி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .