2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடு கடத்தப்பட்டார் நோவக் ஜோகோவிச்

Freelancer   / 2022 ஜனவரி 16 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான கடைசி முயற்சியில் தோல்வியடைந்த உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று (16) நாடு கடத்தப்பட்டார்.

மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் அவர் அவுஸ்திரேலியாவை விட்டுப் புறப்பட்டார்.

உடல்நலம் மற்றும் நல்லொழுங்கு அடிப்படையில் தடுப்பூசி போடாத அவரது விசாவை அரசாங்கம் இரத்து செய்த பின்னர், அவர் தொடுத்த சவால் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தற்காத்து 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் அவரின் நம்பிக்கை தகர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .