2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

புதிய ஐ.பி.எல் அணிகளாக பூனே, ராஜ்கொட்

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இரண்டு புதிய அணிகள், பூனேயையும் ராஜ்கொட்டையும் தளமாமகக் கொண்டிருக்குமென அறிவிக்கப்படுகிறது.

ராஜ்கொட்டைத் தளமாகக் கொண்ட அணியை, தொழிலதிபரான சஞ்சீவ் கோங்காவினால் உரிமைப்படுத்தப்பட்ட ‘நியூ றைஸிங்” கூட்டுநிறுவனமும், ராஜ்கொட்டைத் தளமாகக் கொண்ட அணியை, அலைபேசி உருவாக்குநரான இன்டெக்ஸ் நிறுவனமும் விலைக்கு வாங்கியுள்ளன.

நியூ றைஸிங் குழுமம் மறை 16 கோடி இந்திய ரூபாய்களையும் இன்டெக்ஸ் நிறுவனம் மறை 10 கோடி இந்திய ரூபாய்களையும், ‘நேர்மாறான ஏலம்” மூலமாகக் கோரின.

தவிர, அடுத்தாண்டு ஏப்ரல் 9ஆம் திகதி, ஐ.பி.எல் 9 தொடர் ஆரம்பிக்கவுள்ளதாகவும், தொடரின் முதலாவது, இறுதிப் போட்டிகள், மும்பையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .