2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 30 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த நியூசிலாந்து, நேப்பியரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் மகமதுல்லா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, குறிப்பிட்ட ஓட்டங்களுக்குள் பின் அலென், மார்டின் கப்தில், டெவோன் கொன்வே, வில் யங், மார்க் சப்மனை தஸ்கின் அஹ்மட், மொஹமட் சைபுடீன், ஷொரிஃபுல் இஸ்லாம், மஹெடி ஹஸனிடம் பறிகொடுத்தபோதும், மழையால் 17.5 ஓவர்களோடு நிறைவுக்கு வந்த இனிங்ஸில், கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத 58 (31), டரைல் மிற்செலின் ஆட்டமிழக்காத 34 (16) ஓட்டங்களோடு, 5 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 16 ஓவர்களில் 171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், செளமியா சர்க்காரின் 51 (27) ஓட்டங்கள் தவிர பிரகாசிக்காது ஹமிஷ் பெனிட், டிம் செளதி, அடம் மில்ன், கிளென் பிலிப்ஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 16 ஓவர்களில் 142 ஓட்டங்களையே பெற்று 28 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக பிலிப்ஸ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .