Editorial / 2017 ஜூலை 19 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்த எரங்கவின் பந்துவீச்சுப் பாணி, விதிமுறைகளுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எரங்கவின் பந்துவீச்சுப் பாணி, விதிமுறைகளை மீறுவதாகக் காணப்படுகிறது என, கடந்தாண்டு ஜூனில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், பந்துவீச்சுப் பாணியை மாற்றுவதற்கான பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது அவரது பந்துவீச்சுப் பாணி சரியாகிவிட்ட நிலையில், சர்வதேசப் போட்டிகளில் அவர் பந்துவீச முடியுமென அறிவிக்கப்படுகிறது.
கடந்தாண்டு ஜூனின் பின்னர், போட்டித்தன்மையான எந்தவொரு போட்டியிலும் எரங்க விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago