2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பரிஸ் மாஸ்டர்ஸ்: ஸவ்ரேவ்வை வென்று சம்பியனான மெட்வெடெவ்

Editorial   / 2020 நவம்பர் 09 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்ற பரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில், உலகின் தற்போதைய நான்காம் நிலை வீரரான டனில் மெட்வெடெவ் சம்பியனானார்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் ஏழாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை ரஷ்யாவின் மெட்வெடெவ், 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.

இந்நிலையில், தனது அரையிறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடாலை 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வென்று ஜேர்மனியின் ஸவ்ரேவ்வும், கனடாவின் மிலோஸ் றாவோனிச்சை 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மெட்வெடெவ்வும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X