Editorial / 2017 ஜூன் 28 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும், சர்வதேச கிரிக்கெட் சபையின் மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெற்ற போட்டியொன்றில், பாகிஸ்தானுக்கெதிராக, அபார வெற்றியொன்றை, இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.
லெய்செஸ்டரில், நேற்று மு (27) இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற, பாகிஸ்தான் அணியின் தலைவி சனா மிர், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, குறிப்பிட்ட ஓட்டங்களுக்குள்ளேயே, தமது ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளை இழந்தபோதும், மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த, நட்டாலி ஷிவர், அணித்தலைவர் ஹீதர் நைட் ஆகியோர், 30 ஓவர்களில், அதிரடியாக 213 ஓட்டங்களைப் பகிர்ந்து, இருவரும் சதங்களைப் பெற்ற நிலையில், பின்னர் வந்த டானியலி வயாட், பிரன் வில்சன் ஆகியோரும் அதிரடி காட்ட, 50 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், நட்டாலி ஷிவர் 137 (92), ஹீதர் நைட் 106 (109), டானியலி வயாட் ஆட்டமிழக்காமல் 42 (27), பிரன் வில்சன் 33 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அஸ்மவியா இக்பால் 3, கய்னட் இம்தியாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 377 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 29.2 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, போட்டியில் மழை குறுக்கிட்டது. அதன் பின்னர், போட்டி இடம்பெறுவதற்கு மழை அனுமதித்திருக்கவில்லை. ஆக, மழையால் போட்டி இடைநிறுத்தப்படும்போது, டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, 215 ஓட்டங்களைப் பெற வேண்டி இருந்த நிலையில், 107 ஓட்டங்களால் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
போட்டியின் நாயகியாக, நட்டாலி ஷிவர் தெரிவானார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago