Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்

மருதமுனை மசூர் மௌலானா மைதானம் மின்னொளி மைதானமாக அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர், மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகம் மற்றும் கல்பனா விளையாட்டுக் கழகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மின்னொளியிலான அங்குரார்ப்பண ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கும், மருதமுனை தெரிவு அணிக்குமிடையிலான வியாழக்கிழமை (03) நடைபெற்ற சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிகழ்வில், மசூர் மௌலானா மைதானத்திற்கு நிரந்தர மின்னொளிக் கம்பங்களை பொருத்துவதற்கு கடந்த ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்ததற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு மருதமுனை விளையாட்டு சமூகம் நன்றி பாராட்டி கௌரவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago