2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெய்ல்?

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையை அடுத்த மாத ஆரம்பத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்கொள்ளும்போது, மேற்கிந்தியத் தீவுகளின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமில், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவர் கிறிஸ் கெய்ல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டித் தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்), குவாட்டா கிளாடியேட்டர்ஸுக்காக பங்கேற்ற 42 வயதான கெய்ல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையில் திரும்பியுள்ளார்.

இறுதியாக மேற்கிந்தியத் தீவுகளுக்காக, கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் பங்கேற்றிருந்த கெய்ல், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியொன்றில் இறுதியாக அவ்வாண்டு மார்ச் மாதம் விளையாடியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X