2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, மெளன்ட் மகட்டரேயில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, மார்டின் கப்திலின் 34 (23), டிம் செய்ஃபேர்ட்டின் 18 (13) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றதுடன், அவர்கள் இர்ருவரும் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கிளென் பிலிப்ஸின் 108 (51), டெவோன் கொன்வேயின் ஆட்டமிழக்காத 65 (37) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 239 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், கட்டுக்கோப்பாக பந்துவீசிய கைல் ஜேமிஸன், லொக்கி பெர்கியூஸன், இஷ் சோதி ஆகியோரிடம் முறையே 2, 1, 2 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களையே பெற்று 72 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக கிளென் பிலிப்ஸ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X