Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் முரளி விஜய், விக்கெட் காப்பாளர் ரித்திமான் சகா ஆகியோர் தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இதில் சகாவுக்கு பதிலாக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் நமன் ஒஜாவும், முரளி விஜய்க்கு பதிலாக கருண் நாயரும் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சகாவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது வலது கீழ் தொடைப்பகுதியில் காயமேற்ப்பட்டிருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது வெளியே சென்ற சகா மீண்டும் பின்பு களத்திற்கு திரும்பியிருந்தார். எனினும் இலங்கை அணியின் இரண்டாவது இனிங்சின் போது லோகேஷ் ராகுலே விக்கெட்காப்பாளராக செயற்பட்டிருந்தார்.
முதலாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக பங்கேற்காத முரளி விஜய்க்கு இரண்டாவது போட்டியின்போது முன்னர் இருந்த வலது தொடை காயம் மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும், அவர் முழுமையாக குணமடைவதற்கு மேலதிக உடற்தகுதி பயிற்சிகள் தேவை என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago