2025 மே 23, வெள்ளிக்கிழமை

விம்பிள்டன்: வெளியேற்றப்பட்ட கெனின், அன்றீச்சு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 01 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்று வருகின்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான சோஃபியா கெனினும், ஏழாம் நிலை வீராங்கனையான பியங்கா அன்ட்றீச்சுவும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு நடைபெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான மடிஸன் பிரெங்கிளை எதிர்கொண்ட ஐ. அமெரிக்க வீராங்கனையான கெனின், 2-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸின் அலிஸே கொர்னெட்டை எதிர்கொண்ட கனடாவின் பியங்கா அன்ட்றீச்சு, 2-6, 1-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X