2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெளியேற்றப்பட்டது டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சங்க கிண்ணத் தொடரிலிருந்து டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வெளியேற்றப்பட்டது.

கிறிஸ்டல் பலஸ் அணியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான கால்பந்தாட்டச் சங்க கிண்ணத் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் தோற்றமையைத் தொடர்ந்தே குறித்த தொடரிலிருந்து டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த தொடரில் நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் ஷெபீல்ட் வெனிஸ்டே அணியை நடப்புச் சம்பியன்களான செல்சி வென்றிருந்தது. செல்சி சார்பாக, வில்லியன் இரண்டு கோல்களையும் ஹட்சன் ஒடோய் ஒரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .