2025 மே 01, வியாழக்கிழமை

வெளியேற்றப்பட்டது யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 03 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற புல்ஹாமுடனான விலகல் முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

போட்டியின் மேலதிக நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையில் காணப்பட்ட நிலையில், பெனால்டியிலேயே 3-4 என்ற ரீதியில் புல்ஹாமிடம் தோற்றே தொடரிலிருந்து யுனைட்டெட் வெளியேறியிருந்தது.

பெனால்டியில் முதல் மூன்று உதைகளையும் இரண்டு அணிகளும் உட்செலுத்திய நிலையில், புல்ஹாமின் கோல் காப்பாளர் பேர்ண்ட் லெனோ அடுத்த இரண்டு உதைகளையும் தடுத்ததோடு, நான்காவது உதையை புல்ஹாம் கோல் கம்பத்துக்குள் உட் செலுத்திய நிலையிலேயே 4-3 என்ற ரீதியில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .