2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 400 மாணவர்கள் சித்தி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 400 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம் தெரிவித்தார்.

இந்த வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 167 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதில் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் 39 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதேபோன்று ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 156 மாணவர்களும், ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 77 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X