2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 39 வர்த்தகர்கள் மீது வழக்கு

Kogilavani   / 2012 ஜூலை 12 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                       (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 6 மாத காலத்துக்குள் சட்டவிரோதமான முறையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 39 வர்த்தகர்கள்மீது; வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 1 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தண்டப்பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி வீ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

அளத்தல், நிறுத்தல் கருவிகளுக்கு முத்திரை இடாமை, சரியான அளவை பயன்படுத்தாமை, நிறை குறைந்த பாண் விற்பனை ஆகிய குற்றங்களுக்காகவே இவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி, ஏறாவூர்; வாழைச்சேனை ஆகிய நீதிமன்ற பிரிவுகளில் சுமார் 100 வர்த்தக நிலையங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாவும் இவர்களில் 39 பேர்மீது சட்டவிரோத நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .