2025 மே 01, வியாழக்கிழமை

3 குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரசேத்திலுள்ள 3 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு  கீழுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வை.எம்.எம்.ஏ.நிறுவனத்தின் பெண்கள் பிரிவின் நிதியுதவியில் 3 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்களும் காஸ் அடுப்புக்களும்  வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர்,  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .