2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

3 குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரசேத்திலுள்ள 3 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு  கீழுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வை.எம்.எம்.ஏ.நிறுவனத்தின் பெண்கள் பிரிவின் நிதியுதவியில் 3 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்களும் காஸ் அடுப்புக்களும்  வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர்,  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .