2026 மே 04, திங்கட்கிழமை

மினி சூறாவளியினால் 80 குடும்பங்கள் இடம்பெயர்வு

Super User   / 2012 மே 07 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேணை, மற்றும் வடமுனை ஆகிய கிராமங்களில் இன்று திங்கட்கிழமை மாலை வீசிய மினி சூறாவளியினால் அக்கிராமங்களில் மக்கள் குடியிருந்த தற்காலிக குடிசைகள் சேதமடைந்துள்ளதுடன் அக்கிரமங்களிலிருந்த மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இம்மீள் குடியேற்ற கிராமங்களில்  வீசிய மினி சூறாவளியினால் இக்கிராமங்களில் இருந்து 80 குடும்பங்கள் இடம் பெயர்ந்து ஊத்துச்சேணை அரசினர் தமிழ் கனிஷ்ட பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  இவர்களின் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் உதவி பணிப்பாளர் இன்பராஜன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி கிராமங்களில் வசித்து வந்த மக்கள், கடந்த கால போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து, பின்னர் தற்காலிக குடிசைகளில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .