2026 மே 04, திங்கட்கிழமை

காணாமல் போனவர்களை நினைத்து பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை கடந்த காலங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மதவழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், பேரணியையும் மேற்கொண்டனர். 

காணாமல் போன எமது உறவினர்கள் பாதுகாப்பாக எம்முடன் இணைய வேண்டும் எனக் கேட்டே இவர்கள் இப்பிரார்த்தனையிலும் பேரணியிலும் ஈடுபட்டதாக இதில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் ஒன்றுகூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள், அவர்களின் நண்பர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் அங்கிருந்து  பேரணியாக மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரை, புனித அந்தோனியார் கிறிஸ்;தவ தேவாலயம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலா ஜும் ஆ பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், பின்னர் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திற்கு பேரணியாக  சென்று அங்கு மௌன பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .