2026 மே 04, திங்கட்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Super User   / 2012 ஏப்ரல் 29 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                        (ஆர்.அனுருத்தன்,ஸரீபா)

மட்டக்களப்பு, புனானையில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.  இச்சம்பவம் இன்று ஞாயிறு மாலை 6.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செம்மன்ஓடை 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செய்யது முகமட் சாகுல் கமிட் வயது (48) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் மீறாவோடையைச் சேர்ந்த கயாத்து முகம்மது கலில் வயது (38) என்பவர் காயமடைந்துள்ளார்.

வயலில் வேலை செய்து விட்டு மழை காரணமாக, வயல் வாடிக்குள்இருந்தவர்களின் மீதே மின்னல் தாக்கியுள்ளது.

உயிரிழந்தவிரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .