2026 மே 04, திங்கட்கிழமை

பள்ளிவாசல் தாக்குதலுக்கு தீர்வு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்ப காத்தான்குடியில் கையெழுத்து வேட்டை

Menaka Mookandi   / 2012 மே 11 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

தம்புள்ள ஜும்-ஆ பள்ளிவாயல் அதே இடத்தில் இருக்க வேண்டுமெனவும் பல்லின பல்சமய நாடான இலங்கையில் சகல சமயத்தவர்களினதும் மத உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் தம்புள்ள பள்ளிவாயல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜரொன்றை அனுப்புவதற்காக இன்று காத்தான்குடியிலுள்ள ஜும்-ஆ பள்ளிவாயல்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஜனாதிபதிக்கு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து அனுப்பவுள்ள இந்த மகஜரில் பொதுமக்கள் ஆர்வத்தோடு கையொப்பங்களை இட்டனர்.

காத்தான்குடியிலுள்ள ஜும் ஆ பள்ளிவாயல்களில் ஜும் ஆ தொழுகைக்காக வருகை தந்த பொதுமக்கள் அங்கு வைத்திருந்த மகஜரில் கையொப்பமிட்டனர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பான துண்டுப்பிரசுரமொன்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் இன்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .