2026 மே 04, திங்கட்கிழமை

சிறுவனை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டு; சந்தேகநபர்கள் நால்வர் விளக்கமறியலில்

Super User   / 2012 மே 15 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர். அனுருத்தன்)

வாழைச்சேனைப்  பகுதியில்  ஒரு சிறுவனை கடத்த முற்பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனையில் வைத்து சிறுவனொருவனை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில்  நால்வரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நால்வரும் பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்கும்படியும் எதிர்வரும் 28 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்;கு உட்படுத்தும்படியும் பொலிஸாரை நீதவான் ஏ.எம்.எம். றியாழ்  பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .