2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக மர்சூக் அகமட்லெப்பை தெரிவு

Super User   / 2012 மே 28 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக மர்சூக் அகமட்லெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளரும் முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவருமாவார்.

காத்தான்குடி முகைதீன் மெத்தை பள்ளிவாசலில நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்தின் போதே புதிய தலைவராக மர்சூக் அகமட்லெப்பை தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் சம்மேளனத்தின் புதிய செயலாளராக மௌலவி ஏ.எம்.அப்துல் காதரும் பொருளாளராக எம்.பாயிஸும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .