2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஹந்துன்நெத்தி எம்.பி.முறைப்பாடு

Kogilavani   / 2012 ஜூலை 25 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                  (எம்.சுக்ரி)
மட்டக்களப்பில் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் கிழக்கு மாகாண தேர்தல் இணைப்பாளருமான சுனில் ஹந்துன்நெத்தி முறையிட்டுள்ளார்.

  தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மட்டக்களப்பில் நேற்று பொலிஸார் நடாத்திய கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இம்முறைப்பாட்டை செய்தார்.

'தேர்தல் நடவடிக்கைக்காக மட்டக்களப்பில் தங்கியிருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

இந்நிலையில் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினரும், இரகசிய பொலிஸாரும் சென்று எனது நடவடிக்கை தொடர்பாக அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.

நான் எப்போது வருகின்றேன்  எங்கு செல்கின்றேன் போன்ற விபரங்களையும் அடிக்கடி சென்று நான் தங்கியிருக்கும் வீட்டாரிடம் விசாரித்து வருகின்றனர்.

இது எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விடயமாகும்.  இது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும்' என அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியின் இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கும் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார கேட்டுக்கொண்டார்.

  Comments - 0

  • Kanavaan Wednesday, 25 July 2012 04:20 PM

    ஐயா,உங்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள அனைவருக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தல்தான், அரச கட்சியில் இருப்பவர்களைத் தவிர. நீங்களும் அரசுடன் இணைந்து கொண்டால் போச்சு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .