2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

புதிய கட்சி ஆரம்பித்தார் தங்கேஸ்வரி

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 (கெலும் பண்டார)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமன், கிழக்கு தமிழ் மக்களின் அடையாளத்தை ஊக்குவிப்பதற்காக புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளார்.
தமிழ் மக்களின் சுதந்திரக் கட்சி என இக்கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்தில் பல தமிழ் கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றில் எதுவும் கிழக்கு மக்களின் சமூக, கலாசார, மொழி அடையாளங்களுக்காக செயற்படவில்லை என அவர் கூறினார்.

"கிழக்கு தமிழ் மக்களுக்காக ஒரு கட்சி வேண்டும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக எமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, மக்களுக்கு சேவையாற்ற நாம் விரும்புகிறோம்" என அவர் தெரிவித்தார். தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றியுள்ளது எனவும் அவர் கூறினார்.


  Comments - 0

  • kuhan Tuesday, 07 August 2012 05:20 AM

    கட்சி ஆரம்பித்ததே அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவா?

    Reply : 0       0

    குமார் Tuesday, 07 August 2012 07:04 AM

    புதிய கட்சியின் மூலம் எவ்வளவு வாகுகளை சிதறடிக்க உத்தேசம் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .